NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Tuesday, September 01, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Latest Updates

  

 
 

இளையராஜாவுக்கு என்னாச்சு?

தமிழ்சினிமாவில் சுமார் இருபதாண்டுகளுக்கு மேலாக இசை ராஜாங்கம் நடத்திக் கொண்டிருந்தார் இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மானின் வரவு இளையராஜாவை வீட்டில் உட்கார வைத்தது. அதன் காரணமாக ரஹ்மான் மீதான இளையராஜாவின் கடுப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது. அது மட்டுமல்ல, ரஹ்மானின் திருமணத்தைக் கூட புறக்கணித்தார். தன் மீதான இளையராஜாவின் எரிச்சலை சட்டை செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இசைப்பணியாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான் கோலிவுட்டிலிருந்து தன் பார்வையை விசாலப்படுத்தினார். ஆதல் கட்டமாக பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டினார். அதைத் தொடர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கி, கோல்டன் குளோப், ஆஸ்கார் என சர்வதேச விருதுகளையும் வென்றார்.
ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானைப்பாராட்டி இசையமைப்பாளர்கள் சங்கம் பாராட்டுவிழா நடத்தியது. அந்த விழாவில் இளையராஜா கலந்து கொள்ளமாட்டார் என்ற ஹேஸ்த்தை பொய்யாக்கி, விழாவில் கலந்து கொண்ட இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மாளைப்பாராட்டித்தள்ளினார். அதோடு தங்கச்சங்கிலியும் அணிவித்தார். இதை எல்லாம் வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் மீதான இளையராஜாவின் கோபம் தணிந்து விட்டது என்று எல்«£லரும் நினைத்திருந்த நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டது.
கடந்த சில நாட்களாகவே இசைஞானியின் செயல்களில் ஒரு மாற்றம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் குறித்து ஜாடை மாடையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார். அண்மையில் வெளியான அழகர் மலை படத்தில் வரும் டைட்டில் பாடலில் அவரே தோன்றிப் பாடியிருக்கிறார். அந்தப் பாடலில், 'இந்த நாட்டை விட்டு எங்கோ போகிறவர்கள் போகட்டும். நான் என் மக்களுக்காக இங்கேயே இருந்து பாடுவேன்' என்பது போன்ற வரிகளை எழுதியிருக்கிறார். இந்த வரிகளை கூர்ந்து கவனித்தால் அது ஏ.ஆர்.ரஹ்மான் மீதான தாக்குதல் என்பது புரியும்.
அது மட்டுமல்ல, கடந்த சில தினங்களுக்கு முன் கர்நாடக இசை ஆல்பம் ஒன்று வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு இளையராஜா பேசும்போது, 'எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சிலர் சொல்கிறார்கள். இது தவறு. இறைவனுக்கு எதற்கு புகழ்? புகழை நமக்கு கொடுப்பவனே அவன்தானே? அவன் கொடுத்த புகழை அவனுக்கே கொடுப்பது எப்படி சரியாகும்?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தனக்குக் கிடைத்த புகழ் அனைத்தையும் கடவுளுக்கு உரியது என்பதை குறிக்கும் வகையில், எல்லா மேடைகளிலும் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே!' என்று மறக்காமல் சொல்லி வருபவர் ஏ.ஆர். ரஹ்மான்தான் என்பது சிறு குழந்தைகளுக்குக்கூடத் தெரியும்.
இளையராஜாவுக்கு என்னாச்சு?

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended