|
ஸ்ரீவாரு பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.பரணி
பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் - ஓடி போலாமா. கதை,
திரைக்கதை, வசனம், எழுதி இப்படத்தை இயக்குகிறார் கண்மணி. இவர்
ஏற்கனவே ஆஹா எத்தனை அழகு மற்றும் தெலுங்கில் நாஊ பிரி,
சின்னோடு, கால்சென்டர் ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தில் நடிகை சங்கீதாவின் சகோதரர் பரிமள் கதாநாயகனாக
அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக 'காதல்' சந்தியா
நடிக்கிறார்.
மற்றும் கோட்டா சீனிவாசராவ், மகாதேவன், சுமன் ஷெட்டி, தம்பி
ராமையா, சுதா, 'சங்கராபரணம்' ராஜலட்சுமி இவர்களுடன்
'அசத்தப்போவது யாரு' புகழ் மகேஸ்வரி முக்கிய வேடத்தில்
நடிக்கிறார்.
யதார்த்தமான காதல் கதையாக உருவாகி வரும் ஓடிபோலாமா
திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ஊட்டியில்
நடைபெற்றதைத் தொடர்ந்து அண்மையில் பாடல் காட்சிகள்
படமாக்கப்பட்டன.
பாங்காக்கில் உள்ள பட்டாயா தீவுகளில் அறிமுகநாயகன் பரிமள்,
காதல் சந்தியா நடனமாட,
'அருவிபோல
குதிக்கிற நதியப்போல
மனசப்போட்டு உலுக்குற நீ
அடிக்கடி அடிக்கடி'
என்ற பாடல் படமாக்கப்பட்டது. கிரிஷ் பாடிய இந்தப்பாடலை
எழுதியவர் தபூசங்கர்.
இமான் பாடிய சினேகன் எழுதிய,
'ரகளக்கார மாமன் நானடி
ரகள பண்ணும் அழகி நீயடி'
என்ற பாடல் பாங்காக்கில் உள்ள வீதிகளில் படமாக்கப்பட்டது.
இப்பாடல்களைத் தொடர்ந்து, சினேகன் எழுத, புனேயைச் சேர்ந்த
ஆர்த்தி காங்லீகர் பாடிய,
'பூச்சாண்டி பூச்சாண்டி
காதல் ஒரு பூச்சாண்டி'
என்ற பாடல், சென்னை வி.ஜி.பி.யில் அமைக்கப்பட்ட அரங்கில்
ரகசியா டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா இணைந்து ஆட படமாக்கப்பட்டது.
ஒளிப்பதிவு: அஞ்சி
இசை: டி.இமான்
பாடல்கள்: நா.முத்துகுமார், சினேகன், தபூசங்கர்
படத்தொகுப்பு: சுரேஸ்அர்ஸ்
சண்டைப்பயிற்சி: கணேஷ்
நடனம்: கல்யாண், தினேஷ்
கலை: ராஜா
தயாரிப்பு மேற்பார்வை: கே.முருகானந்தம்
தயாரிப்பு: வி.பரணி
நிர்வாக தயாரிப்பு: தஞ்சை எஸ்.சரவணன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கண்மணி |